உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெட்டி கடையில் குட்கா விற்ற பெண் கைது

பெட்டி கடையில் குட்கா விற்ற பெண் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர். ஒரகடம் அருகே, பனையூர் கிராமத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக, ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று காலை, பனையூர் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், தடை செய்யப் பட்ட விமல், கூல் லிப், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 5,000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான விஜயா, 46, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ