நேற்றைய போக்சோ சிறுமியை தாயாக்கிய சிறுவன்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த, 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, வீட்டில் உள்ளார். சில நாட்களாக அவரின் நடவடிக்கைகளில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்த அவரது தாய், அவரிடம் விசாரித்த போது, வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் சிறுமி, 8 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதே பகுதி, 17 வயது சிறுவன், மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. நாகர்கோவில் மகளிர் போலீசார், சிறுவன் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.சிறுமிக்கு குழந்தை; வாலிபர் கைதுஅவிநாசி: திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், உறவினரான 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியதால், கடந்த மாதம், வீட்டிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அதன்பின், அந்த வாலிபருடன் சிறுமிக்கு வீட்டிலேயே, அவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையே, சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுமி குழந்தை பெற்றது தெரியவந்ததையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலகு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர்.அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் அந்த வாலிபரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த வாலிபரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.