உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி விழிப்புணர்வு

கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி விழிப்புணர்வு

கரூர், கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் சேமங்கியில் நேற்று நடந்தது.அதில், நுாற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், குடற்புழு நீக்குதல், தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை, செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி, கால்நடை மருத்துவர் உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை