உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாயி வீட்டில் நகை திருட்டு: வாலிபர் கைது

விவசாயி வீட்டில் நகை திருட்டு: வாலிபர் கைது

விவசாயி வீட்டில் நகை திருட்டு: வாலிபர் கைதுகரூர் :கரூர் அருகே, விவசாயி வீட்டில் தங்க நகை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன், 53, விவசாயி. இவர் கடந்த, 28ல் மதியம் வீட்டில், துாங்கி கொண்டிருந்தார். அப்போது, கரூர் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த மதன், 19, என்பவர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த, ஒன்றரை பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளார்.இதுகுறித்து, சாமிநாதன் கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் மதனை கைது செய்து விசாரிக்கின்றனர். கைது செய்யப்பட்ட மதன் மீது, போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை