உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம் : லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, வீரவள்ளி, கொம்பாடிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, மகிளிப்பட்டி, நந்தன்கோட்டை, பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. பூவன் தார், 250 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், பச்சநாடன், 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உள்ளூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை