உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டையில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டையில் வாழைத்தார்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை ஏலம் கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, பொய்கைப் புத்துார், மகாதானபுரம், கள்ளப்பள்ளி, கருப்பத்துார் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பூவன் தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஏராளமான வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி