கோவை சாலையில் உடைந்த இரும்பு கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
கரூர்: கரூர்-கோவை சாலையில் உடைந்துள்ள, இரும்பு தடுப்பு கம்பி-களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்-ளனர்.கரூரில் இருந்து கோவை செல்லும் சாலையின் நடுவே, இரண்டு கிலோ மீட்டர் துாரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்-டுள்ளது. பல இடங்களில் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்தும், வளைந்தும் உள்ளது. கோவை சாலையில் நாள்தோறும், நுாற்றுக் கணக்கான லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதை தவிர, இருசக்கர வாகனங்களிலும், பொது-மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் உடைந்துள்ள தடுப்பு கம்பிகளால், கோவை சாலையில் நாள்தோறும் விபத்-துகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்கள் புகார் தெரி-வித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். விபத்தின் மூலம் பொதுமக்கள் படு-காயம் அடைவது தொடர்கதையாக உள்ளது. எனவே, கரூர்- கோவை சாலையில் உடைந்த நிலையில் உள்ள, இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டியது அவசியம்.