உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செவிலியர் மாயம் போலீசில் தாய் புகார்

செவிலியர் மாயம் போலீசில் தாய் புகார்

கரூர்: கரூர் அருகே, செவிலியரை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் ஆர்.ஏ., நகரை சேர்ந்த ராஜா என்பவரது மகள் வினோதினி, 25; கோவிந்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 28ல் வீட்டில் இருந்து, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வேலை செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் சாந்தி, 51; போலீசில் புகார் செய்தார். பசுப-திபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை