ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பாலசுப்பிரமணியம், ஓட்டு பெட்டிகளை பயன்படுத்தும் வகையில், தயார் நிலையில் வைத்திருப்பது, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடைமுறைகள், விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது, மாவட்ட கலெக்டர் தங்கவேல், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா, கலெக்டர் நேர்முக உதவியாளர் தமிழரசி உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.