பயன்பாட்டுக்கு வந்த சிறுபாலம்
பயன்பாட்டுக்கு வந்த சிறுபாலம்குளித்தலை:குளித்தலை நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ள, கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் சுங்ககேட்டில் இருந்து, வதியம் பஞ்., எல்லரசி வரை, ஆறு சிறு பாலம் பராமரிப்புக்காக, ரூ.1.6 கோடி ஒதுக்கப்பட்டு, பாலம் கட்டும் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கி நேற்று முன்தினம் மாலையில் இருந்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. நெடுஞ்சாலை உதவிகோட்ட பொறியாளர் செந்தில்குமரன். உதவி பொறியாளர் ஜெயபாலன், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், அசோகன், ஆர்.ஐ. சேகர், அரசு ஒப்பந்ததாரர் பழனிசாமி மற்றும் நெடுஞ்சாலை துறை, போலீசார் உடன் இருந்தனர்.