உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

கரூர் : கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்-பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள் உள்பட மொத்தம், 482 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனா-ளிகளிடம் 49 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக, 6 பேருக்கு, 5.23 லட்சம் ரூபாய் மதிப்பில் கை, கால் உள்ளிட்ட நவீன செயற்கை அவயங்களை வழங்-கினார். கலை பண்பாட்டுத்துறை சார்பாக இளையோருக்கான மாவட்ட கலைப்போட்டிகளில் பரதநாட்டியம், குரலிசை, கருவி-யிசை, கிராமிய நடனம் மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்-கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்க-ளையும் கலெக்டர் தங்கவேல் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் சுதா, சப் கலெக்டர் பிரகாஷ், டி.ஆர்.ஓ.,க்கள் முகமதுபைசல் (கரூர்), தனலெட்சுமி (குளித்தலை) உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை