உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

கரூர்: கரூர் அருகே, புகழ்பெற்ற பாலமலை கோவில் பகுதியில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் அருகே, பிரசித்தி பெற்ற பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும், அதே பகுதியில் அருகருகே பெருமாள் கோவில், அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பவுர்ணமி, கார்த்திகை, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், பால மலைக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், பாலமலை பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால், பாலமலைக்கு வரும் பக்தர்கள் மழை காலத்தி லும், வெயில் அதிகமாக அடிக்கும் போதும் அவதிப்படு-கின்றனர். எனவே, கோவில் அடிவார பகுதியில் உள்ள பால-மலை பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ