உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாழைக்காய் மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்

வாழைக்காய் மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்

கிருஷ்ணராயபுரம், மே 6-கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.வாழைத்தார் அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரத்தில் இருந்து வாழைத்தார் சீரான விலையில் விற்பனை நடக்கிறது. இதில், பூவன் தார் ஒன்று, 250 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் விற்பனை ஜோராக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி