உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார் விற்பனை ஜோர்

ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார் விற்பனை ஜோர்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில், விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை, வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்கின்றனர்.ஆடி அமாவாசையான நேற்று, வாழைத்தார் தேவை அதிகரித்ததால் விற்பனை அதிகரித்தது. அதன்படி, பூவன் தார், 250 ரூபாய், ரஸ்தாலி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை