உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருக்காடுதுறை மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

திருக்காடுதுறை மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

கரூர்:கரூர் மாவட்டம், திருக்காடுதுறை மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 21 ல் பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, 27 வரை பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா, மூலவர் அம்மனுக்கு வடிசோறு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று மாலை காவிரியாற்றில், பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக சென்று, மாரியம்மன் கோவில் முன், அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதையொட்டி, மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று அதிகாலை, 5.00 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், கிடா வெட்டுதல் மற்றும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ