பராமரிப்பின்றி கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவதி
கரூர்: கரூர் அருகே பல மாதங்களாக, பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படு-கின்றனர்.கரூர் பஞ்சாயத்து யூனியன், வாங்கல் பஞ்சாயத்தில், போலீஸ் ஸ்டேஷன் அருகே, சில ஆண்டுகளுக்கு முன், புதிதாக கழிப்-பிடம் கட்டப்பட்டது. அதை அந்த பகுதியை சேர்ந்த, பொது-மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடத்தின் உள்பகுதிகளில், சேதம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அங்கு செல்-வதை தவிர்த்தனர். இதனால், தற்போது கழிப்பிடத்தை சுற்றி முட்புதர்கள் முளைத்து, புதர்மண்டி உள்ளது.எனவே, கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பராமரிப்பு செய்து, பயன்பாட்டுக்கு விட, வாங்கல் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவ-சியம்.