உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து 446 கன அடியாக சரிவு

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து 446 கன அடியாக சரிவு

கரூர்: கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 446 கன அடியாக குறைந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 488 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 225 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட் டது. மழை காரணமாக, கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 446 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 89.01 அடியாக இருந்தது.* கரூர் மாவட்டம், மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12 ஆயிரத்து, 62 கனஅடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக, காவிரியாற்றில், 10 ஆயிரத்து, 442 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,620 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.81 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை