உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீரராக்கியத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

வீரராக்கியத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்

கரூர்:கரூர்--திருச்சி மாநில நெடுஞ்சாலையில் வீரராக்கியம் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக சாலையோரம் நின்று பஸ்சில் பயணிக்கின்றனர். இப்பகுதியில் நிழற்கூடம் இல்லாதல், வெயில், மழையில் பயணிகள் நிற்க வேண்டி உள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாகளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ