உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி

பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி

பைக் மீது கார் மோதிவாலிபர் பரிதாப பலிகரூர், அக். 16-கரூர் அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், குளித்தலை குன்ன கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன், 27; இவர் நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பைக்கில், கரூர்-திருச்சி சாலை காந்திபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஈரோடு மாவட்டம், நம்பியூரை சேர்ந்த மவுலீஸ்வரன், 25; என்பவர் ஓட்டி சென்ற மகேந்திரா கார், கோபாலகிருஷ்ணன் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த கோபால கிருஷ்ணன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி