எம்.சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து
குளித்தலை: குளித்தலை நகராட்சி, தெற்கு மணத்தட்-டையை சேர்ந்தவர் காமராஜ்; இவர், புதிய வீடு கட்டி வருகிறார். இதற்காக, அய்யர்மலையில் உள்ள மணல் குவாரியில் எம்.சாண்ட் புக்கிங் செய்திருந்தார்.இதையடுத்து, டிப்பர் லாரியில் எம்.சாண்ட் ஏற்-றிக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வயலுார் கிராமத்தை சேர்ந்த சடையன் மகன் பாஸ்கர், 32, ஓட்டி வந்தார். லாரியை குறு-கிய பாதையில் இயக்க முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகே இருந்த வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பாஸ்கர் சிக்கி கொண்டார். விபத்து குறித்து, முசிறி தீய-ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், கிரேன் உதவியுடன் பாஸ்கரை பலத்த காயத்துடன் மீட்டனர். அவ-ருக்கு, குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்கு கரூர் அரசு கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குளித்-தலை போலீசார் விசாரிக்கின்றனர்.