ஐப்பசி அமாவாசை: சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி
கரூர், பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. அதைதொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல், கரூரில் மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், தான்தோன் றிமலை காளியம்மன் அம்மன் கோவில்களிலும், பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.