உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனைத்து தொழிற்சங்கங்கள் 2வது நாளாக பிரசாரம்

அனைத்து தொழிற்சங்கங்கள் 2வது நாளாக பிரசாரம்

கரூர்: கரூர் மாவட்ட, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், திருமாநி-லையூர் அரசு போக்குவரத்து பணிமனை முன், நேற்று இரண்டா-வது நாளாக பிரசார இயக்கம் நடந்தது.அதில், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை அமலாக்க கூடாது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்-டன.பிரசார இயக்க கூட்டத்தில் மாவட்ட எல்.பி.எப்., தலைவர் அண்ணாவேலு, மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன், ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் வடிவேலன், நிர்வாகி பால்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ