உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் வாசுகி தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடை, 10 லட்ச ரூபாய், உதவியாளருக்கு, ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக மாதம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் சாந்தி, மாவட்ட பொருளாளர் செல்வி, மாவட்ட சி.ஐ.டி.யு., துணைத்தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சுப்பிரமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ