உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அண்ணாதுரை நினைவு தினம்: கரூர் தி.மு.க.,வினர் அஞ்சலி

அண்ணாதுரை நினைவு தினம்: கரூர் தி.மு.க.,வினர் அஞ்சலி

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அவை தலைவர் ராஜேந்-திரன் தலைமை வகித்தார். அங்குள்ள, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கரூரில் உள்ள, தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் இருந்து, கோவை சாலை வழியாக கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்-டானா வரை அமைதி பேரணியாக சென்றனர். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள, அண்ணாதுரை சிலைக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துகுமார், ஒன்றிய செயலாளர் கமலகண்ணன் உள்-பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி