குளித்தலை நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணி
குளித்தலை நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகுளித்தலை, டிச. 24-குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சப் - கோர்ட், மாவட்ட உரிமையியல். மாவட்ட குற்றவியல், குற்றவியல் எண்-1, குற்றவியல் எண்- 2, உள்பட ஆறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின்படி, குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று காலை 10:00 மணி முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.