உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாழை இலை விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்

வாழை இலை விலை உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வாழை இலை விலை உயர்ந்து விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, வீரகுமரன்பட்டி, கருப்-பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் விவசா-யிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழை இலைகள் அறுக்கப்பட்டு சிறிய கட்டுகளாக கட்டி கரூர், திருச்சி, குளித்-தலை ஆகிய பகுதிகளில் செயல்படும் ஹோட்டல்களுக்கு விற்ப-னைக்கு அனுப்பப்படுகிறது.தற்போது முகூர்த்த சீசன் மற்றும் தைப்பூசம் விழா காரணமாக இலை விலை உயர்ந்துள்ளது. வாழை இலை ஒன்று மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரம் வாழை இலை ஒன்று, இரண்டு ரூபாய்க்கு விற்றது. ஒரு இலைக்கு ஒரு ரூபாய் உயர்ந்-துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை