| ADDED : டிச 05, 2025 10:59 AM
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்-தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்-ளபாளையம், கள்ளப்பள்ளி, கருப்பத்துார், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, வீரகுமா-ரன்பட்டி, பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறு-வடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.வாழை சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகி-றது. தற்போது வாழைத்தார்களின் வரத்து சரிந்-துள்ளது. இதனால் வாழைத்தார்கள் சீரான விலையில் விற்கப்பட்டது. பூவன் வாழைத்தார், 250 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 150 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்-றனர்.