உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடவூர் தாலுகா அலுவலகத்தில் ஆக.,18ல் பொலிரோ ஜீப் ஏலம்

கடவூர் தாலுகா அலுவலகத்தில் ஆக.,18ல் பொலிரோ ஜீப் ஏலம்

கரூர், கடவூர் தாலுகா அலுவலகத்தில் பயன்படுத்தி வந்த வாகனங்களின் ஏலம், 18ம் தேதி நடக்கிறது.கடவூர் தாலுகா அலுவலகத்தில், பயன்படுத்தி வந்த வாகனம் (மஹிந்திரா பொலிரோ ஜீப்) வரும், 18, காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், அன்று காலை 10:00 முதல் 11:00 மணி வரை வாகனத்திற்கு, 2,000 ரூபாய்- முன்வைப்பு தொகையினை செலுத்தி, ஏலம் எடுக்க தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையை உடனே செலுத்திட வேண்டும். ஏலம் எடுக்க விரும்புவோர் வரும், 10 காலை 10:00 மணி முதல் ஏலம் நடக்கும் நேரம் வரை வாகனத்தை, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பார்வையிடலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ