உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புத்த, சமண, சீக்கியர்கள் புனித பயணம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

புத்த, சமண, சீக்கியர்கள் புனித பயணம் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

கரூர், புத்த, சமண, சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டை சேர்ந்த, 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான, புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள, நபர் ஒருவருக்கு, 10 ஆயிரம் ரூபாய்- வீதம், 120 பேருக்கு, 12 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ.,30க்குள் உரிய ஆவணங்களுடன், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை