மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
13-May-2025
குளித்தலை :குளித்தலை அடுத்த, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வடிவேல், 43, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் கிருஷ்ணா காந்தி, 19, கரூர் தனியார் கல்லுாரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12 காலை, 9:15 மணியளவில் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, லாலப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
13-May-2025