உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஸ் - சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி; 24 பேர் காயம்

பஸ் - சரக்கு வாகனம் மோதி டிரைவர் பலி; 24 பேர் காயம்

குளித்தலை : குளித்தலை அருகே, தனியார் பஸ்சும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சரக்கு வாகன டிரைவர் பலியானார். 2௪ பேர் காயமடைந்தனர்.குளித்தலை அருகே திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை கருப்பத்துாரில், கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ், குளித்தலையில் இருந்து கரூர் நோக்கி வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் சரக்கு வாகன டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பஸ்சில் பயணம் செய்த, 22 பயணிகள், பஸ் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் பலத்த காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ