உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு மேல்நிலைப்பள்ளியில்சூழல் நுாலகம் தொடக்க விழா

அரசு மேல்நிலைப்பள்ளியில்சூழல் நுாலகம் தொடக்க விழா

கரூர்புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ், சூழல் நுாலகம் ( சுற்றுச்சூழல் பாதுகாப்பு புத்தகங்கள்) தொடக்க விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி தலைமை வகித்தார். கரூர் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் சூழல் நுாலகத்தை திறந்து வைத்து, வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார். விழாவில், உதவி தலைமையாசிரியர்கள் யுவராஜ், பொன்னுச்சாமி, பள்ளி ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஜெரால்டு, ஆசிரியர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !