உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்

கி.புரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் சேமிக்கப்-படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு வந்து, கட்டளை காவிரி கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது, மாயனுார் காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரில் ஜிலேபி மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன.நேற்று நடந்த விற்பனையில் ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற மீன்களான கெண்டை கிலோ, 90 ரூபாய், பறை கிலோ, 120 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி, லாலாப்பேட்டை, கிருஷ்ணராய-புரம், திருக்காம்புலியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள், அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை