ஆட்டோ டிரைவர்களுக்குஇலவச சீருடை
கரூர், கரூரில், மாவட்ட ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் கணேசன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற கரூர் எம்.பி., ஜோதிமணி, ஆட்டோ டிரைவர்கள், 200 பேருக்கு இலவசமாக சீருடை வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநகர தலைவர் வெங்கடேசன், கரூர் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, கரூர் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க தலைவர் சந்தானகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.