கரூரில் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு, 405 மனுக்களை மக்கள் அளித்தனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக காதொலி கருவிகள், டெய்சி பிளேயர், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு குச்சி மற்றும் கருப்புக் கண்ணாடி மற்றும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என ஏழு பயனாளிகளுக்கு, 35,216 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.சப்-கலெக்டர் பிரகாசம், உதவி ஆணையர் கருணாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசக்திகங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.