உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.28 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.28 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கரூர், அக். 30-சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 5.28 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கள் கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஏலம் நடக்கிறது. நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. கரூர், க.பரமத்தி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வேளாண் பொருட்-களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் நிலக்கடலை வாங்கி சென்றனர்.மொத்தம், 229 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 60.25 ரூபாய், அதிகபட்சமாக, 72.20 ரூபாய், சராசரியாக, 70.60 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,833 கிலோ எடையுள்ள நிலக்கடலை, ஐந்து லட்சத்து, 28 ஆயிரத்து, 717 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ