உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.4.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.4.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கரூர்: சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 4.31 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானதுகரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் வேளாண் பொருட்கள் ஏலம் நடக்கிறது. நேற்று முன்தினம் நிலக்கடலை ஏலம் நடந்தது. கரூர், க.பரமத்தி பகுதி-களை சேர்ந்த விவசாயிகள் வேளாண் பொருட்-களை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியா-பாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் நிலக்கடலை வாங்கி சென்றனர்.ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசா-யிகள், 171 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 72.20 ரூபாய், அதிகபட்ச-மாக, 77.60 ரூபாய், சராசரியாக, 76.50 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 5,727 கிலோ எடையுள்ள நிலக்கடலை, நான்கு லட்சத்து, 31 ஆயிரத்து, 133 ரூபாய்க்கு விற்பனையா-னது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ