கரூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழை
கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று காலை வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. வங்க கடலில், 'பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த, மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்-டத்துக்கு கன மழை பாதிப்பு குறித்த அறிவிப்பு இல்லை என்ற நிலையிலும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் கரூர் மாவட்டம் முழுவதும், விடிய, விடிய மழை பெய்-தது. மழையுடன் குளிர்ந்த காற்று வீசியதால், அவதிப்பட்ட பொதுமக்கள் குடை, ஸ்வெட்டர், ரெயின் கோட் சகிதம், கரூரில் உலா வந்தனர்.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,ல்): கரூர், 7.40, அரவக்குறிச்சி, 9, அணைப்பாளையம், 6.20, க.பரமத்தி, 7, குளித்தலை, 14.20, தோகைமலை, 9.20, கிருஷ்ணராயபுரம், 13.50, மாயனுார், 15, பஞ்சப்பட்டி, 10.60, மயிலம்பட்டி, 4 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராச-ரியாக, 8.01 மி.மீ., மழை பதிவானது. அமராவதி அணை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 799 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 87.80 அடியாக இருந்தது. அமரா-வதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 304 கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றில், 788 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாயனுார் கதவணை: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,257 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 657 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்-காலில், 600 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணை: க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்-துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 23.74 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 43 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.