அங்காள பரமேஸ்வரி கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமி விழா
கரூர், டிச. 15-புன்னம்சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கார்த்திகை பவுர்ணர்மியையொட்டி, சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு சந்தன காப்பு மற்றும் பூக்கள் அலங்காரத்தில், மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும், வேலாயுதம்பாளையம் சேமங்கி மஹா மாரியம்மன் கோவில், நத்தமேடு அங்காளம்மன் கோவில், பவித்திரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புகழூரில் உள்ள மேகமாலீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.