உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெளியூருக்கு புறப்பட்ட மக்கள் களை கட்டிய கரூர் பஸ் ஸ்டாண்ட்

வெளியூருக்கு புறப்பட்ட மக்கள் களை கட்டிய கரூர் பஸ் ஸ்டாண்ட்

கரூர் : காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி, பொதுமக்கள் நேற்று வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால், நேற்று காலை கரூர் பஸ் ஸ்டாண்டில், கூட்டம் களை கட்டியது.தமிழகம் முழுவதும், பள்ளிகளில் காலாண்டு தேர்வு நிறைவு பெற்ற நிலையில், நேற்று முன்தினம் முதல் வரும், 6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயுதபூஜை, விஜயதசமி விழா விடுமுறையும் அடங்கும். இதையடுத்து, பொது மக்கள் நேற்று வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை பொதுமக்கள், மாணவ, மாணவியர் கூட்டம் நிரம்பி வழிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !