உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 15 ஆண்டுக்கு முன் பிறந்த குழந்தை சான்று பெற டிச., 31 கடைசி நாள்

15 ஆண்டுக்கு முன் பிறந்த குழந்தை சான்று பெற டிச., 31 கடைசி நாள்

15 ஆண்டுக்கு முன் பிறந்த குழந்தைசான்று பெற டிச., 31 கடைசி நாள்கரூர், அக். 9-- கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற டிச.,31 வரை விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறந்த, 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான பிறப்பு சான்றிதழாகும். குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுனர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம் பெற, அயல்நாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து, 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்கு பின், 15 ஆண்டுக்குள், 200 ரூபாய்- தாமத கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.அதன்படி, 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க டிச., 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை