காத்தவராயன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
குளித்தல: குளித்தலை அடுத்த இரணியமங்கலம் பஞ்., வளையப்பட்டியில் காத்தவராயன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனர-மைப்பு செய்து, கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்-குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். நேற்று அதிகாலை, மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. கோபுர கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். பின், பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.