உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் தொடக்கம்

மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் தொடக்கம்

கரூர் : கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கம்பம் நடுதலுடன், நேற்று தொடங்கியது.கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு, நேற்று காலை பாலம்மாள்புரத்தில் இருந்து, கம்பம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோவிலில் ஒப்படைக்கப்படும். பின், மாலை, 5:00 மணிக்கு அமராவதி ஆற்றுக்கு கம்பம் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கருப்பாயி கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.அதைதொடர்ந்து வரும், 17ல் பூச்சொரிதல் விழா, 19ல் காப்பு கட்டுதல், 27ல் தேரோட்டம், 28ல் மாவிளக்கு ஊர்வலம், பால்குட ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 29ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.வரும் ஜூன், 6ல் பஞ்ச பிரகாரம், 7ல் புஷ்ப பல்லக்கு, 8ல் ஊஞ்சல் உற்சவம், 9ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ