18,202 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர் தகவல்
கரூர்: ''நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில், 18,202 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.அரவக்குறிச்சி அருகில் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்-கவேல் முகாமை தொடங்கி பின், கூறியதாவது:பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தைகள் நலம், இதய நலம், நரம்பியல், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரழிவு நோய்க்-கான சிறப்பு மருத்துவம், தோல், பல், கண் சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அனைத்து சிகிச்சைகளும் பரிசோத-னைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இது-வரை, 6,911 ஆண்கள், 11,149 பெண்கள் என, 18,202 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முகாமில், இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) செழியன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.