உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மைக் செட் கடையில் திருடியவர் கைது: இருவர் தலைமறைவு

மைக் செட் கடையில் திருடியவர் கைது: இருவர் தலைமறைவு

குளித்தலை: மைக் செட் கடையில் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டார். இருவர் தலைமறைவாகினர்.குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்சாயத்து பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 37. இவர் மைக் செட் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் ரேடியோ சம்பந்தப்பட்ட ஒயர் மற்றும் ஆம்ப்ளிபயர் மின்விளக்குகளை, தன்னுடைய ஓட்டு வீட்டில் வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி வீட்டின் கூரையை பிரித்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், ஏழு பண்டல் ஒயர் மற்றும் ஆம்ப்ளிபயரை திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு, 25 ஆயிரம் ரூபாய்.இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை செய்ததில், பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்த வசந்த், 23, பிரவீன் குமார், 24, கிஷோர், 20, ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இவர்களின் வசந்தை போலீசார் கைது செய்தனர். இருவர் தலைமறைவாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை