உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்

கரூர், வாங்கல் அருகே, தாயை காணவில்லை என போலீசில் மகன் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வாங்கல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த கதிர்வேல் என்பவரது மனைவி வெங்கட்டம்மாள், 80; இவர் கடந்த, 25ம் தேதி இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதுகுறித்து, அவரது மகன் ராஜேந்திரன், 50, போலீசில் புகார் செய்தார்.வாங்கல் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை