மேலும் செய்திகள்
அத்திப்பாளையத்தில் பட்டா வழங்கும் விழா
23-Dec-2025
வயலுாரில் மோசமான சாலை வாகன ஓட்டிகள் பாதிப்பு
23-Dec-2025
அம்மாபேட்டை அருகே விபத்தில் இருவர் பலி
23-Dec-2025
மனைவி மாயம்; கணவர் புகார்
23-Dec-2025
கரூர்,: தேசிய, மாநில நெடுஞ்சாலை திறந்தவெளி கிணறுகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. விபத்து ஏற்படுவதற்கு முன், கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள திறந்தவெளி கிணறுகளால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இந்த கிணறுகளுக்கு தடுப்பு சுவர் அல்லது கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டது. அந்த நேரத்தில் மட்டும் சில இடங்களில் பாதுகாப்பு இல்லாத சாலையோர கிணறுகள் மூடப்பட்டன. ஆனால், பெரும்பாலான இடங்களில் திறந்தவெளியில் இருந்த கிணறுகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையிலிருந்து பள்ளமான பகுதியில் கிணறு உள்ளதால், வாகனங்கள் நிலைதடுமாறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் இதுபோன்ற கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025
23-Dec-2025