உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆத்துார் சாலையில் செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் தவிப்பு

ஆத்துார் சாலையில் செயல்படாத சிக்னலால் வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர் : கரூர், ஆத்துார் பிரிவு சாலையில் போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளதால், விபத்துகள் ஏற்படுகின்றன.கரூரில், ஈரோடு சாலை முதல் ஆத்துார் பிரிவு சாலை வரை, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, ஆத்துாரில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு, நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் சென்று வருகின்றன இங்கு, சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனை, போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. பிரிவு சாலையில் பழுதடைந்த போக்குவரத்து சிக்னலை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை