ரூ.19.56 லட்சத்துக்குநிலக்கடலை ஏலம்
கரூர்:சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை, 19.56 லட்சத்துக்கு ஏலம் போனது.கரூர், க.பரமத்தி ஆகிய பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி நடக்கிறது. இங்கு, விளையும் நிலக்கடலையை நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்து ஏலம் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 818 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 64.26 ரூபாய், அதிகபட்சமாக, 75.29 ரூபாய், சராசரியாக, 73.10 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 27 ஆயிரத்து, 824 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 19 லட்சத்து, 56 ஆயிரத்து, 702 ரூபாய்க்கு விற்பனையானது.