சாலையில் குவிந்துள்ள குப்பை துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கரூர் :கரூர் அருகே, சாலையில் குப்பை கொட்டப்படுவதால், பொதுமக்கள் தொற்று பீதியில் உள்ளனர்.கரூர் அருகே, ஆண்டாங்கோவில் பொன்வேல் நகரில் வீடுகள், வியாபார நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பொன்வேல் நகரில், சாலையில் கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, சாலையில் சிதறுகின்றன. தொடர் மழைகாரணமாக, குப்பையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.எனவே, ஆண்டாங்கோவில் சாலை பொன்வேல் நகரில் உள்ள, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.